கடையத்தில் வாலிபர் குத்திக்கொலை
1 min read
The teenager was stabbed to death in the shop
3.7.2022
கடைத்தில் வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார்.
மதுகுடித்தனர்
தென்காசி மாவட்டம் கடையம், கீழக்கடையம் பாதுகாத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். தொழிலாளியான இவர் நெல்லிக்காய், எலுமிச்சைப்பழம் பறிக்கச் செல்வார்.
இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேலைக்குச் சென்றுவிட்டு நெல்லிக்காய் பறித்து மூட்டையை கடையில் போட்டார். அதன்பின் மதியம் வீட்டில் சாப்பிட்டார்.
இதனை அடுத்து நண்பர்களுடன் வீட்டின் அருகே வயல்வெளியோரம் உள்ள கருப்பசாமி கோவில் பக்கம் நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர்கள் மது அருந்தியதாக தெரிகிறது. மது அருந்திவிட்டு சக்திவேல் பகல் 2.35 மணிக் குஅருகே உள்ள அண்ணன் வீ்ட்டுக்குச் சென்று தண்ணீர் கேட்டுள்ளார். அண்ணன் மகன் ஒரு செம்பில் தண்ணீர் கொடுத்தார். அதை குடித்துவிட்டு சென்றார்.
கொலை
அவர் சென்ற சிறிது நேரத்தில் அவர் வயலுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தகவல் வந்தது. இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது சக்திவேல் இறந்தது தெரியவந்து. அவரது கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் வயிறில் குத்தியதில் குடல் வெளியே வந்திருந்தது.
கொலை செய்யப்பட்ட சக்திவேலுக்கு சயத்தியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஒருமகன் 5ம் வகுப்பும், இன்னொரு மகன் 3ம் வகுப்பும் படிக்கிறார்கள்.
சக்திவேல் இறந்தது பற்றிய தெரிந்ததும், அவரது மனைவி, தாய், அண்ணன், தம்பி, மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடையம் போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைகாக தெனகாசி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டனர். அவருடன் மது அருநதியவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக ஒருவர் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது.