June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 2,743 பேருக்கு கொரோனா

1 min read

Today 2,743 people in Tamil Nadu have Corona

6.7.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 6ம் தேதி) ஒரே நாளில் 2,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (ஜூலை 5 ) 26,692 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,062; செங்கல்பட்டு 403; திருவள்ளூர் 169;கோவை 127; திருச்சி 113 ; காஞ்சிபுரம் 94; திருநெல்வேலி 71;கன்னியாகுமரி 68; தூத்துக்குடி 62; விருதுநகர் 50; சேலம் 43; ராணிப்பேட்டை 42; மதுரை 35; திருவண்ணாமலை 34; திருப்பூர் 30; ஈரோடு 27 ;விழுப்புரம் 26; சிவகங்கை 24; கடலுார், கள்ளக்குறிச்சி, நாமக்கல் 21;தேனி 20; திருவாரூர் 18; தென்காசி 17;கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை16; நீலகிரி, தஞ்சாவூர்13; வேலூர், பெரம்பலுார் 14; திண்டுக்கல், நாகை 12; கரூர் ,ராமநாதபுரம் 8; தர்மபுரி7; அரியலுார் 6; திருப்பத்துார் 4; மயிலாடுதுறை 2, என மொத்தம் 2,743பேருக்கு தொற்று உறுதியானது.

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,90,834 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,35,090 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,027 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியது. நேற்று (ஜூலை 5ம் தேதி ) 1,060 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 5 ம் தேதி) சென்னையில் 1062 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,717 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.