திருமணத்திற்கு வந்திருவர்கள் மீது வாகனம் மோதி 6 பேர் பலி
1 min read
6 people died when a vehicle crashed into the wedding party
9.7.2022
உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்து சாலையோரம் அமர்ந்திருந்த நபர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
திருமண நிகழ்ச்சி
உத்தர பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் ராவ்லி கல்யாண்பூர் கிராமத்தில் பரத்குப் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வீடு ஒன்றில் திருமண நிகழ்ச்சி நடந்து வந்தது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த பலர் சாலையோரம் அமர்ந்திருந்து உள்ளனர். இந்நிலையில், அந்த பகுதி வழியே வாகனம் ஒன்று வந்துள்ளது. திடீரென அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் இன்று உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயம் அடைந்த நபர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். வாகன ஓட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.