தமிழகத்தில் இன்று 2,093 பேருக்கு கொரோனா
1 min read
2,093 people in Tamil Nadu have corona today
21.7.2022
தமிழகத்தில் இன்று 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; –
தமிழகத்தில் இன்று மேலும் 2,093 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 26 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சர்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,290 ஆகும். கொரோனா பாதிப்புக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,031 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய 34 ஆயிரத்து 662 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தலைநர் சென்னையில் 516 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 516- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கோயம்புத்தூரில் 178 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.