அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 15 பேர் நீக்கம்
1 min read
15 supporters of O. Panneerselvam expelled from AIADMK
25.7.2022
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் நியமித்த கு.ப.கிருஷ்ணன் உள்பட அவரது ஆதரவாளர்கள் 15 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகத்தின் கொள்கைகளுக்கும் , குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் , கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் , அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கு.ப. கிருஷ்ணன் , முன்னாள் அமைச்சர் C. ராஜேந்திரன், ( கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ) சீனிவாசன் , ( கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ) தாய் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ஆர் . ராஜலட்சுமி , ( கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக இளைஞர் பாசறை , இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ) முகம்மதுஅலி ஜின்னா , ( கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் ) . M. பாரதியார் , ( கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ) சிவா , ( கழக எம்.ஜி.ஆர் . இளைஞர் அணி துணைச் செயலாளர் ) ஆம்னி பஸ் அண்ணாதுரை , ( கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் ) ராஜ்மோகன் , ( திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் ) C. ராமசந்திரன் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைச் செயலாளர் ), மணவை ஸ்ரீதரன் ராவ் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைத் தலைவர் ) T. சுஜைனி , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல இணைச் செயலாளர் ) விஜய் பாரத் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் ) – இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு மோகனப்பிரியா , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் ) மோகன் , ( கழக அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவுப் பொருளாளர் ) ஆகியோர் , இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.