June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 34 யானைகள் இறந்துள்ளன

1 min read

Death rate of tigers and elephants in India

26.7.2022
கடந்த 3 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 222 யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 34 யானைகள் இறந்துள்ளன.

இந்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மக்களவையில் அறிக்கை ஒன்றை சமர்பித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புலிகள்

கடந்த 3 ஆண்டுகளில் வேட்டையாடுதல், இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான காரணங்களால் 329 புலிகள் உயிரிழந்துள்ளன. அதில் 2019-ல் 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும் , 2021-ல் 127 புலிகளும் உயிரிழந்துள்ளன. அவற்றில் 68 புலிகள் இயற்கையான காரணத்தினாலும், 5 புலிகள் இயற்கைக்கு மாறான காரணங்களாலும், 29 புலிகள் வேட்டையாடப்பட்டதாலும், 30 புலிகள் பிற காரணங்களாலும் உயிரிழந்துள்ளன. 197 புலிகளின் இறப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் இருந்து வேட்டையாடுதல் தொடர்பாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2019-ல் 17 வழக்குகளாக இருந்தது 2021-ல் 4 வழக்குகளாக குறைந்துள்ளது.

புலி தாக்கி 125 பேர் சாவு

புலி தாக்கியதில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 61 பேர், உத்தரபிரதேசத்தில் 25 பேர் அடங்குவர்.
கடந்த 3 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 222 யானைகள் உயிரிழந்துள்ளன. அதில் ஒடிசாவில் 41 யானைகளும், தமிழ்நாட்டில் 34 யானைகளும், அசாமில் 33 யானைகளும் உயிரிழந்துள்ளது. மேலும், ரெயில் விபத்துகளில் 45 யானைகள் உயிரிழந்துள்ளன. மேகாலயாவில் 12 , ஒடிசாவில் 7 யானைகள் உட்பட 29 யானைகள் வேட்டையாடப்பட்டதால் உயிரிழந்துள்ளன. அசாமில் 9 யானைகள் உட்பட 11 யானைகள் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.