“அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” – பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min read
“Everyone should get a booster dose of vaccine” – PM Modi insists
4.8.2022
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அனைவரும் கொரோனா தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நமது குடும்பம், கிராமம் அல்லது ஊர்களில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.