June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 12,608 பேருக்கு கொரோனா

1 min read

12,608 new cases of corona in India

18.8.2022

இந்தியாவில் புதிதாக ஒரே நாளில் 12,608 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாக உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு நேற்று சற்று குறைந்தது. இந்தநிலையில் இன்று காலை வரை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இது 12 ஆயிரத்து 608 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 9,062 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று காலை 12,608 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 16,251 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,36,70,315 ஆனது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,05,058 லிருந்து 1,01,343 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக பதிவானது. இந்தநிலையில், இன்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 206 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,08,95,79,722 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 38,64,471 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.