தமிழகத்தில் இன்று 639 பேருக்கு கொரோனா
1 min read
In Tamil nadu 639 personaffected by coronaToday
19.8.2022
தமிழகத்தில் கொரோனா தொற்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இன்று (ஆக.19 ம் தேதி) ஒரே நாளில் 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) 639 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,62,092 ஆக அதிகரித்துள்ளது. இன்று 810 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,17,830 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( ஆக.,19) கோவிட் பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 38,033 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு குறைவாக காணப்பட்டது. நேற்று (ஆகஸ்ட்18ம் தேதி )107 ஆக இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 19 ம் தேதி) சென்னையில் 98 ஆக குறைந்து உள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,229 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.