June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆந்திராவில் வெள்ளம் 100 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிப்பு

1 min read

Floods in Andhra Pradesh leave 100 villages under water

2182022

ஆந்திராவில் கிருஷ்ணா, கோதாவரி மற்றும் துங்கபத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடுள்ளது. இதனால் 100 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

ஆறுகளில் வெள்ளம்

பருவ மழை காரணமாக கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.
மழை பெய்வது படிப்படியாக குறைந்ததால் அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

தவிப்பு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி மற்றும் துங்கபத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் சென்றதால் போலவரம், மற்றும் கபிலேஸ்வரம் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்தது. இடுப்பளவுக்கு மேல் மழை வெள்ளம் செல்வதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏற்கனவே கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகள் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.