கொலை குற்றவாளியை காதலியுடன் ஓட்டல் அறைக்குள் அனுப்பி, காவலுக்கு நின்ற போலீஸ்காரர் கைது
1 min read
The policeman who sent the accused of murder to the hotel room with his girlfriend, was arrested
21.8.2022
கொலை குற்றவாளியை காதலியுடன் அறைக்குள் அனுப்பிவிட்டு வெளியே போலீசார் காவலுக்கு நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை குற்றவாளி
கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த கொலை குற்றவாளி பச்ஷா கான் (வயது 55). கொலை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள பச்ஷா கான் தற்போது பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்க்கு தொடர்பாக பச்ஷா கான் நேற்று தஹர்வாட் பகுதியில் உள்ள கோர்ட்டிற்கு 3 போலீசாரால் அழைத்து வரப்பட்டுள்ளார். கோர்ட்டில் ஆஜரான பின் மீண்டும் தஹர்வாட் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
காதலியுடன்…
அப்போது, பச்ஷா கானின் வேண்டுகோளை ஏற்று தஹர்வாட் சிறைக்கு செல்லாமல் அவரை போலீசார் ஹூப்ளிக்கு அழைத்து சென்றுள்ளனர். ஹூப்ளியின் கோகுல் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பச்ஷா கானை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அந்த ஓட்டலில் பச்ஷா கான் தனது காதலியை சந்தித்துள்ளார். பின்னர், பச்ஷா கானையும் அவரது காதலியையும் போலீசார் ஓட்டல் அறைக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
பச்ஷா கானும் அவரது காதலியும் ஓட்டல் அறையில் தனிமையில் இருந்துள்ளனர். அந்த அறைக்கு வெளியே 3 போலீசாரும் காவலுக்கு நின்றுள்ளனர். பச்ஷா கான் தஹர்வாட் சிறைக்கு கொண்டு செல்லாமல் பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்துள்ளதாக கோகுல் ரோடு பகுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கைது
இந்த தகவலையடுத்து, அந்த ஓட்டலில் கோகுல் ரோடு பகுதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் குற்றவாளி பச்ஷாகான் தனது காதலியுடன் ஓட்டல் அறையில் இருந்ததையும், குற்றவாளியின் காவலுக்கு அந்த அறைக்கு வெளியே 3 போலீசார் காவலுக்கு நின்றதையும் கண்டு கோகுல் நகர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கொலை குற்றவாளி பச்ஷாகான், அவரது காதலி மற்றும் காவலுக்கு நின்ற 3 போலீசார் என 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.