June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 8,586 பேருக்கு கொரோனா

1 min read

8,586 new cases of corona in India

23.8.2022
இந்தியாவில் புதிதாக 8,586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 ஆயிரத்து 539 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திங்கட்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இது 10 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இதன்படி திங்கட்கிழமை 9 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று 9 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

48 பேர் சாவு

இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 586 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,43,57,546 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,416 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9,680 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,33,624 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 96,506 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,10,31,65,703 பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,25,342 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 3,91,281 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,31,16,790 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.