தி.மு.க. தான் அறிவாளியான கட்சி என நினைக்க வேண்டாம்- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பரபரப்பு கருத்து
1 min read
DMK Don’t think that you are an intelligent party – the sensational opinion of the Chief Justice of the Supreme Court
23.8.2022
இலவச திட்டங்கள் குறித்த வழக்கில் திமுக குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தி.மு.க. தான் அறிவாளியான கட்சி என நினைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இலவச திட்டங்கள்
இலவச திட்டங்களை முறைப்படுத்தக்கோரி அஸ்வினி குமார் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இலவச திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை திவால் நிலைக்கு இட்டுச்செல்லும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மத்திய அரசின் சார்பிலும் இதே வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி, தேர்தலின் போது இலவச வாக்குறுதிகளை அளிக்கவேண்டாம் என கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்படி உத்தரவிட முடியும் என்ற கேள்வியை முன்வைத்தார்.
மேலும், இது குறித்து மத்திய அரசு கூறும்போது, “போலியான இலவச அறிவிப்புகள் பொருளாதாரத்தை சீரழிக்கின்றன” என்று தெரிவித்தது.
கண்டும் காணாதது போல்…
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடும்போது, தலைமை நீதிபதி கடும் கோபத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி என்ற முறையில் என்னால் எதுவும் கூற முடியவில்லை. ஆனால் உங்கள் கட்சி நடந்துகொண்ட விதம் மற்றும் உங்கள் அமைச்சர் பேசும் விதத்தை நாங்கள் கண்டும் காணாதது போல் இருக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். உங்கள் கட்சி மற்றும் அறிவாளித்தனமாக செயல்படுகிறது என நினைக்கவேண்டாம் என்ற கருத்தை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தனது வாய்மொழி கருத்துக்களால் விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.