June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 7,219 பேருக்கு கொரோனா

1 min read

7,219 new cases of corona in India

3.9.2022
இந்தியாவில் இனறு காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,219 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் இறங்கு முகம் கண்டது. வியாழக்கிழமை 7 ஆயிரத்து 946 பேருக்கு தொற்று உறுதியானது. வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 168 ஆக குறைந்திருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 7 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7 ஆயிரத்து 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,49,726 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,965 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 9,651 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,65,016 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 56,745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 2,13,01,07,236 பேருக்கு (இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,83,815 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3,64,886 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,68,31,141 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.