இந்தியாவில் புதிதாக 5,108 பேருக்கு கொரோனா
1 min read
5,108 new corona cases in India
14.9.2022
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 5,108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பாதிப்பான 4 ஆயிரத்து 369-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 10 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 36 ஆயிரத்து 92 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
19 பேர் சாவு
கொரோனா தாக்குதலுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 215 கோடியே 67 லட்சத்து 6 ஆயிரத்து 574 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.