June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

1 min read

Kallakurichi student’s death: Smt.’s mother appeals Supreme Court against Madras High Court order

14.9.2022
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து மாணவியன் தாய சுப்ரீம்கோர்ட்டி் மேல்முறையீடு செய்து்ள்ளார்.

மாணவி சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டது.

மேல்முறையீடு

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய கோரி மாணவி ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியைகள் 2 பேருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்யவும், மாணவி மரணத்தில் ஜிம்பர் மருத்துவக் குழு ஆய்வு அறிக்கையை தர மறுத்ததை எதிர்த்தும் ஸ்ரீமதியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.