June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முரமு பங்கேற்கிறார்

1 min read

President Drarubathi Muramu attends the funeral of Queen Elizabeth of England

14.9.2022
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் பண்ணை மாளிகையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர்.

ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

ஜனாதிபதி

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக வரும் 17-ம் தேதி லண்டன் செல்கிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.