June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 5,747 பேருக்கு கொரோனா

1 min read

5,747 new corona cases in India

17.9.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 5,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில்கொரோனா

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 5 ஆயிரத்து ,747 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. வெள்ளிக்கிழமை 6 ஆயிரத்து 298 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 5 ஆயிரத்து 747 ஆக குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,45,22,774 லிருந்து 4,45,28,524 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் 5,618 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,47,756 லிருந்து 4,39,53,374 ஆக உயர்ந்துள்ளது.

29 பேர் சாவு

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் பலியாகினர். இதுவரை 5,28,302 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46,748 லிருந்து 46,848 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 216 கோடியே 41 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 23,92,530 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.