தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா
1 min read
Today 509 people have corona in Tamil Nadu
21.9.2022
தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 271 ஆண்கள், 238 பெண்கள் என மொத்தம் 509 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 108 பேர், செங்கல்பட்டில் 47 பேர் உள்பட 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. திருப்பத்தூர் மற்றும் திருவாரூரில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 26 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 114 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 448 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவர் சாவு
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 159 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.