June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 4,777 பேருக்கு கொரோனா

1 min read

4,777 new cases of corona in India

25.9.2022
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 777 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பாதிப்பான 4 ஆயிரத்து 912-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 68 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 610 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

23 பேர் சாவு

கொரோனா தாக்குதலுக்கு இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 217 கோடியே 56 லட்சத்து 67 ஆயிரத்து 942 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.