தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா
1 min read
540 people have corona in Tamil Nadu today
26.9.2022
தமிழகத்தில் இன்று 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் 12-வது நாளாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 540 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 108 பேர், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,80,979 ஆகும். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 498 பேர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 437 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.