June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

குஜராத், மராட்டியத்தில் ரூ. 317 கோடி கள்ள நோட்டு பறிமுதல்

1 min read

In Gujarat, Maharashtra Rs. 317 crore fake notes seized

4.10.2022
குஜராத், மராட்டியத்தில் ரூ. 317 கோடி கள்ள நோட்டு பறிமுதல் செய்யதனர். பல மாநிலங்களில் கள்ளநோட்டை அச்சிட்டு கூரியர் தொழில் மூலம் அதை கொண்டுவந்துள்ளனர்.

கள்ள நோட்டு

குஜராத் மாநிலத்தில் சிலர் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதேபோல், மராட்டியத்திலும் இதுபோன்று கள்ள நோட்டுகள் புழக்கம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து குஜராத் மற்றும் மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் மாநில போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட முக்கிய குற்றவாளி விகாஸ் உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சோதனையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 317 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். குறிப்பாக மராட்டியத்தில் மட்டும் 227 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கூரியர்

இது குறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான விகாஸ் குஜராத், மராட்டியம், மத்தியபிரதேசம், டெல்லி என 4 மாநிலங்களில் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கள்ள நோட்டுகளை அச்சிட்டு அதை தனது கூரியர் நிறுவனம் மூலம் மும்பைக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் அதை தனது கூட்டாளிகளுடன் இணைந்து புழக்கத்தில் விட முயற்சித்தும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட விகாஸ் உள்பட 6 பேரையும் சிறையில் அடைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.