அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் துப்பாக்கிமுனையில் கடத்தல் –
1 min read
American Indian family kidnapped at gunpoint
4.10.2022
அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்திய குடும்பம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சென்ட்ரல் வெலி பகுதியில் இந்திய குடும்பம் வசித்து வருகிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்தீப் சிங் (வயது 36) தனது மனைவி ஜஸ்லீன் கவூர் (வயது 27) உடன் வாழ்ந்து வருகின்றார். இந்த தம்பதிக்கு அரோகி டொஹிரி என்ற 8 மாத குழந்தை உள்ளது. ஜஸ்தீப் சிங்கின் உறவினர் அமந்தீப் சிங் (வயது 39). இந்நிலையில், அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தினரை துப்பாக்கிமுனையில் நேற்று சிலர் கடத்திச்சென்றுள்ளனர். ஜஸ்தீப் சிங் அவரது மனைவி ஜஸ்லீன் கவூர், குழந்தை அரோகி மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகிய 4 பேரையும் துப்பாக்கி ஏந்திய நபர் கடத்திச்சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய குடும்பத்தினரை கடத்தி சென்றது யார்? எத்தனை பேர் கடத்தி சென்றனர்? கடத்தலுக்கான காரணம் என்ன? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தப்பட்ட இந்திய குடும்பம் எங்கு உள்ளனர் என்பது குறித்தும் அவர்களை மீட்கும் பணிகளையும் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்திய குடும்பம் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.