July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

டியூசன் படிக்க வந்த மாணவனை காதலித்த ஆசிரியை: கழற்றி விட்டதால் விரக்தியில் மாணவன் தற்கொலை

1 min read

Teacher who fell in love with student who came to Tucson to study: student commits suicide in frustration after being removed-

12.10.2022
டியூசன் படிக்க வந்த மாணவனிடம் ஆசிரியை ஒருவர் காதலித்து கல்யாணம் என கூறி கழற்றிவிட்டதால் விரக்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆசிரியை மாணவன் காதல்

அம்பத்தூர் அருகே வைகை தெருவைச் சேர்ந்த 17 வயதுதான மாணவன் பிளஸ் 2 முடித்து விட்டு கல்லூரியில் சேர காத்திருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தனது நண்பர்களுடன் சென்னை, மாநிலக் கல்லூரிக்கு கலந்தாய்வுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார்.
அதன் பிறகு அந்த மாணவரின் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்சொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் பிறகு,உறவினர்கள் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆசிரியை காதல்

அதில் அந்த 17 வயது மாணவன் அம்பத்தூரில் உள்ள சர் ராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற போது அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்ற ஆசிரியை நடத்தி வந்த டியூஷனில் கடந்த 3 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார். அப்பொழுது அந்த மாணவனுக்கும் ஆசிரியை சர்மிளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆசிரியை சர்மிளாவிற்கு அவரது வீட்டில் திருமண வரன் பார்த்து வந்துள்ளனர். இதன்காரணமாக அவர் மாணவனுடனான நட்பை துண்டித்து வந்துள்ளார். மேலும் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டதால் ஆசிரியை மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்து விட்டார்.

இதனால் மாணவன் பலமுறை ஆசிரியை சர்மிளாவை பேசமுயன்றுள்ளார். எனினும் ஆசிரியை காதலை தொடர மறுத்ததால் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆசிரியை தவிக்க விட்டு சென்று விட்டாலே என நினைத்து மாணவன் விரக்தியில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கைது

இதன் பின்னர் அவரது மொபைலை ஆய்வு செய்ததில் இவை அனைத்தும் வெளி வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டியூஷன் சொல்லி கொடுத்த ஆசிரியையுடான கூடா நட்பால் மாணவன் வழி தடுமாறி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மாணவர்களின் உறவினர்களிடையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.——————————————————————————————————————————————————–

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.