இந்தியாவில் புதிதாக 2,119 பேருக்கு கொரோனா
1 min read
2,119 new corona cases in India
21.10.2022
இந்தியாவில் ஒரு நாளில் புதிதாக 2,119 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 2,119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,38,636 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,037- ஆக உள்ளது.
10 பேர் பலி
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,84,646- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,953 ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று மட்டும் 4,63,338 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது