July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 2,112 பேருக்கு கொரோனா

1 min read

2,112 new cases of corona in India

22.10.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 2,112 பேருக்குகொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தயாவில் கொரோனா

இந்தியாவில் இன்று காலை கடந்த 24 மணி நேரத்தில் 2,112 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,40,748 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 24,043 ஆக உள்ளது. .
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,87,748 ஆக உயர்ந்துள்ளது.

4 பேர் சாவு

கொரோனா பாதிப்புக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,957ஆக உயர்ந்தது. இந்தியாவில் நேற்று மட்டும் 2,90,752 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.