June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வு பெறறார்

1 min read

Supreme Court Chief Justice YU Lalit retires

7.11.2022
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஓய்வு பெறறார்.இதை அடுத்து நாட்டின் 50-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக வருகிற 9-ந்தேதி பதவியேற்க உள்ளார்.

தலைமை நீதிபதி

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி பதவியேற்றார். என்.வி. ரமணா ஓய்வுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார். யு.யு.லலித்தின் பணிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆனால் நாளை (8-ந்தேதி) குருநானக் ஜெயந்தியையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடைசியாக இன்று பணியாற்றினார். இதையொட்டி அவர் தலைமையில் கூடும் சிறப்பு அமர்வின் நடவடிக்கைகள் சுப்ரீம் கோர்ட்டின் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிற்பகலில் கூடிய அமர்வில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் இடம் பெற்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்க உள்ளார். அவர் நாட்டின் 50-வது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக நாளை மறுநாள் (9-ந்தேதி) பதவியேற்க உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.