இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 360 பேருக்கு கொரோனா
1 min read
360 new corona cases in one day in India
24.11.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,70,075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6,046 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,33,433- ஆக உயர்ந்துள்ளது.
5 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,596 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்று புதிதாக 13 ஆண்கள், 19 பெண்கள் உள்பட மொத்தம் 32 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் உள்பட மொத்தம் 15 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. திண்டுக்கல், தர்மபுரி, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 8 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 170 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 385 பேர் சிகிச்சையில் உள்ளனர்.