மதமாற்றம் தான் அறப்பணியின் நோக்கமா?- சுப்ரீம் கோர்ட்டு வேதனை
1 min read
Is religious conversion the purpose of charity work?- Supreme Court Angam
5.12.2022
மதமாற்றம்தான் அறப்பணியா? என்றும் பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மதமாற்றம்
சூனியம், மூடநம்பிக்கை மற்றும் வலுக்கட்டாய மத மாற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வழக்கறிஞரும், பாஜக தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்தனர். மேலும் மதமாற்றம் தான் அறப்பணியின் நோக்கமா? என்றும் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநிலங்களிடம் விளக்கம் பெற்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.