June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம்-சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

1 min read

Act to allow Jallikattu to protect Tamil Nadu culture-Tamil Nadu government’s argument in Supreme Court

6/12/2020
தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.

ஜல்லிக்கட்டு

தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

விலங்குகள் வதை

விலங்குகளுக்கு தேவையற்ற வதை, வலியை தடுக்கும் அதே விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில், அவசியமான வலியும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதி சுமக்கும் விலங்குகளை சுட்டிக்காட்டி வாதங்களை அவர் முன் வைத்தார். விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய சட்டசபை, நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு, விலங்கு வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டசபைக்கு அதிகாரமுண்டு. விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலும் தடுக்க முடியாது.

கலாச்சாரம்

தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலாச்சாரம் உள்ளது. பிரியாணிக்காக விலங்குகளை பலியிடுவது கலாச்சாரமாகும். அசைவ பிரியர்களை கறி சாப்பிட கூடாது என விலக்கு வதை தடுப்புச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியுமா? தமிழக கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிகட்டை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.