June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு தாருங்கள்- பிரதமர் மோடி வேண்டுகோள்

1 min read

Please cooperate for the smooth running of Parliament – PM Modi request

7.12.2022
நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு தாருங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றக்கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்த அவை மற்றும் நாட்டின் சார்பாக சபாநாயகர் ஜக்தீப் தங்கருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கிறேன். பல்வேறு தடைகளை சந்தித்து நீங்கள் இந்த நிலையை அடைத்து உயர்ந்துகொண்டு செல்கிறீர்கள்.

விவசாயி மகன்

இது நாட்டு மக்கள் சிலருக்கு உத்வேகமாக இருக்கும். நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன். அவர் ராணுவ பள்ளியில் பயின்றுள்ளார். ஆகையால், அவர் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார். நாடு 75-வது சுதந்திர தினம் கொண்டாடும்போதும், ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்கும்போதும் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

நமது ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கு முன், நமது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமூகத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்தவர். தற்போது நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன். நமது துணை ஜனாதிபதிக்கு சட்டத்துறையிலும் நல்ல அறிவு உள்ளது.
இவவ்வாறு அவர் பேசினார்.

பேட்டி

கூட்டம் தொடக்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இளம் எம்.பி.க்கள், புதிய எம்.பி.க்கள், முதல் முறை எம்.பி.க்களுக்கு கூட்டத்தொடர் விவாதத்தின் போது அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அமளி, போராட்டங்களால் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் தடைபடும்போது கற்றல் மற்றும் புரிதல் இன்மை ஏற்படுவதாக இளம் எம்.பி.க்களுக்கு என்னிடம் கூறியுள்ளனர். ஆகையால், நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுவது முக்கியம்.

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதால் பேச வாய்ப்பு கிடைக்காமல் இழப்பு ஏற்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கூறுகின்றனர். ஆகையால், எம்.பி.க்களின் வலியை எதிர்க்கட்சி தலைவர்களும், அனைத்து கட்சியினரும் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.