கடும் பனிமூட்டம்: 5 வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்
1 min read
Heavy fog: Red alert for 5 northern states
8.1.2023
பனி மூட்டம் காரணமாக 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கனிமூட்டம்
வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக , பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமாநிலங்களில் ஜனவரி 10 முதல் குளிர் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.