காஷ்மீர் சுரங்கப்பாதையில் பனிச்சரிவு- 172 தொழிலாளர்கள் மீட்பு
1 min read
Avalanche in Kashmir tunnel- 172 workers rescued
16.1.2023-
காஷ்மீர் சுரங்கப்பாதையில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 172 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
பனிச்சரிவு
காஷ்மீரில் உள்ள கான்செர்பால் மாவட்டம் சர்பால் கிராமத்தில் ஜோஜிவா சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டது.
மீட்பு
இதில் 172 தொழிலாளர்களும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை. இதனால் சுரங்கத்துக்குள்ளேயே தவித்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் பனிச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 172 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர்.