ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா
1 min read
Theppathruvizha at Srivaikundam Kallapran Swamy Temple
6.2.2023
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது.
கள்ளபிரான் கோவில்
தூத்துக்குடி மாவட்டத்தின் நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் முதல் கோவிலான கள்ளபிரான் சுவாமி கோவில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. இக்கோவிலின் தை மாத தெப்பத்திருவிழா இன்று இரவு 7 மணி நடைபெற்றது. அப்போது ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி, நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தப்பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தனர்.
இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து நாளை (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி மட்டும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.