குற்றாலம் விடுதியில் காவலாளி கொலை?
1 min read
Courtalam hostel guard killed?
10.2.2023
குற்றாலம் தனியார் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த காவலாளியின் உடலை போலீசார் மீட்டனர். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதி காவலாளி
தென்காசி மாவட்டம் வெள்ளகால் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கதுரை (வயது 68). இவர் குற்றாலத்தில் ஒரு விடுதியில் காவலாளியாக பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விடுதியின் உரிமையாளர் அவரை பணியிலிருந்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் பணியில் இருந்து செல்லாமல் அங்கேயே இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது முகத்தில் காயம் இருந்துள்ளது.
இதுகுறித்து அவரது மகன் மகேஷ் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று சிங்கதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சிங்கதுரை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது தாக்கியதில் இறந்தாரா? என்பது குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.