தென்காசி அரசுப்பள்ளி மாணவி வாலிபருடன் மீட்பு
1 min read
Tenkasi Government School girl rescued with teenager
10/2/2023
தென்காசியில் காணாமல் போன மாணவியை போலீசார் சென்னையில் வாலிபருடன் மீட்டு தென்காசி அழைத்து வருகின்றனர்.
மாணவி
தென்காசி பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி கடந்த 2-ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அன்று இரவு 8 மணிக்கு தென்காசி போலீசில் அவரது தாயார் புகார் செய்தார்.
போலீஸ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்
இந்நிலையில் பள்ளி மாணவி புதுச்சேரியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து போலீசார் புதுச்சேரிக்கு விரைந்தனர் ஆனால் அவர் அங்கிருந்து சென்னைக்குச் சென்றதாக தகவல் கிடைத்தது
வாலிபருடன்…
இதனை தொடர்ந்து போலீசார் சென்னைக்கு சென்று பள்ளி மாணவி கண்டுபிடித்தனர் அப்போது அவருடன் புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் இருந்தார்.
புதுச்சேரி வாலிபர் மற்றும் தென்காசி பள்ளி மாணவி இருவரையும் போலீசார் மீட்டு தென்காசி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் அவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.