மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இந்தியா-இலங்கை விரைவில் பேச்சுவார்த்தை: எல்.முருகன்
1 min read
India-Sri Lanka to hold talks soon to resolve fishermen issue: L. Murugan
12.2.2023
மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இந்தியா-இலங்கை விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
இலங்கை பயணம்
இலங்கை, யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்று இருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பினர்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை சிறையில் நேற்றைய தினம் வரை தமிழக மீனவர்கள் யாரும் இல்லை. மீனவர்களின் படகுகளை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஏற்கனவே பேசி உள்ளோம். கடலில் மீன்பிடிப்பதில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா- இலங்கை நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளும் முன்வைத்துள்ள சில முக்கிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. பசுக்களை அரவணைக்கும் நோக்கில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.