திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
1 min read
20 years imprisonment for laborer who sexually assaulted girl in Tiruvannamalai district
24.2.2023
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் மோரக்கனியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 28) கூலித் தொழிலாளி. கடந்த 20.10.2018 அன்று மதியம் 5 வயது சிறுமியும் அவரது 3வயது தம்பியும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த சந்தோஷ் வேர்க்கடலை கொடுப்பதாக கூறி, சிறுமியை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
இதை அறிந்த சிறுமியின் தாய் அங்கு சென்றபோது சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார். கதறி அழுத தனது மகளை மீட்டு சேத்துப்ட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் பாலியல் வன்கொடுமையால் பாதித்ததை உறுதி செய்தனர். இதுகுறிதது போளூர் மகளிர் காவல் நிலையததில் சிறுமியின் தாய் புகார்அளித்தார். அதில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சந்தோஷ் மீதும், இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க கூடாது என மிரட்டிய சந்தோஷின் தந்தை செபாஸ்டின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு பொது வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி அளித்த தீ்ர்ப்பில் 5 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சந்தோசுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இந்த வழக்கில் இருந்து சந்தோஷின் தந்தை செபாஸ்டின் விடுவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சநதோசை காவல்துறையினர் கைது செய்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.