கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளி தொடங்க 28ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
1 min read
You can apply for starting a new vocational school in Kanyakumari district by 28th
24.2.2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம்
புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக விண்ணபிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
———————————————————-இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
2023-2024-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் அல்லது தொழிற்பிரிவுகளில் கூடுதல்
அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 28.2.2023 நள்ளிரவு 11:59 முடிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2023-2024-ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் அல்லது
கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் RTGS / NEFT மூலம் செலுத்த வேண்டும்.
அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000/- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்: 28.02.2023. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in
என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம்
தொலைபேசி எண். 044-22501006 (113) அல்லது [email protected] என்ற
மின்னஞ்சல் முகவரி அல்லது நாகர்கோவில், கோணம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-
264463, 94799055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து
கொள்ளலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.