June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சுரண்டை அரசுகல்லூரி பேராசிரியர் மீது பிஎச்டி மாணவி பாலியல் புகார்

1 min read

PhD student sexual complaint against Surandai Govt college professor

2.3.2023
தென்காசி மாவட்டம், சுரண்டை அரசு கலைக்கல்லூரியில் பிஎச்டி பட்டம் பயின்று வரும் மாணவி துறை தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து முதலமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகார்

தென்காசி மாவட்டம், சுரண்டை அரசு கல்லூரியில் வணிகவியல் துறையில் மாணவி ஒருவர் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருக்கு வழிகாட்டியாக இருந்து வந்த பேராசிரியர் வேறு கல்லூரிக்கு மாறுதலாகி சென்று விட்டார்.
இருப்பினும் மாணவி இதே கல்லூரியில் வணிகளிவல் துறையில் ஆய்வுப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்
இந்நிலையில் வணிகவியல் துறையில் தலைவராக இருந்து வரும் அஜித் என்பவர் கடந்த 7 மாதங்களாக பிஎச்டி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் சார்ந்த துன்பங்களைக் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆய்வு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆய்வு அறையில் அமர்ந்துகொண்டு தகாத முகம் சுழிக்கும் அறுவறுக்கத்தக்க வார்தைகளைப் பேசியும். மேலும் இரட்டை அர்த்தத்திலும் பேசி வருவதாகவும் அறையின் மின் இணைப்புகளை நிறுத்திவிட்டு கதவையும் சாத்திவிடுவதாகவும் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட மாணவியிடம் நேரடியாகவே வந்து ஆய்வு வழிகாட்டியை மாற்றிவிட்டு அவருடன் வந்துவிட வலியுறுத்தியும் அவர் மனது வைத்தால்தான் ஆய்வு படிப்பை முடிக்க முடியும் எனக்கூறி மிரட்டுகிறார்.

தடையின்மை சான்றில் கையெழுத்து கேட்டால் போடமுடியாது. நான் சொல்வதை மட்டும் செய்யாமல் உனக்கு சான்றிதழ் தரமாட்டேன், நீ யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக் கொள்ளலாம் எனக் கூறி மிரட்டி வருகிறாராம். ஆகவே சம்பந்தப்பட்ட மாணவி இவர் தரும் தொல்லையினால் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு ஆய்வுப்பணியை முடிக்க முடியாமல் திணறுவதாக தெரிகிறது.
ஆகவே வணிகவியல் துறை தலைவர் அஜித்திடமிருந்து மாணவியை காப்பாற்றவும் இதுபோன்று வேறு எந்த மாணவிகளுக்கும் நடக்காத வகையில் வணிகவியல் துறைத்தலைவர் அஜித் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட மாணவி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.ப.க.அஜித். (ஒரிஜினல் பெயர் குழந்தைராஜ்) பெயர் அழகாக வேண்டும் என்று கெசட்டில் பெயர் மாற்றியுள்ளார்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகார் நகலினை உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர், கல்லூரிக்கல்வி இயக்குநர் , கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் சுரண்டை காமராசர்அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.