வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை விடுமுறை
1 min read
Tomorrow is a holiday for Kanyakumari district on the occasion of Vaikundaswamy’s birthday
2.3.2023
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 191 வது பகவான் வைகுண்டசாமி பிறந்த நாளினை
முன்னிட்டு வருகிற சனிக்கிழமை அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அன்றைய
தினம் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
4.3.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 ஏப்ரல் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (8.4.2023) அன்று கன்னியாகுமரி
மாவட்டத்தில் மேற்படி உள்ளூர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பகவான் வைகுண்டசாமி பிறந்த நாளிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 4.3.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு
சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.