பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 9 போலீசார் பலி
1 min read
9 police killed in Pakistan bomb attack
6.3.2023
பாகிஸ்தானில் மனித வெடி குண்டு தாக்குதலில் போலீஸ் வாகனம் நொறுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 9 போலீசார் பலியானார்கள்.
மனித வெடிகுண்டு
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் போலீஸ் வாகனம் மீது மோதினார்.
இதில் குண்டு வெடித்ததில் போலீஸ் வாகனம் நொறுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 9 போலீசார் பலியானார்கள். 15 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானில் சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மசூதி ஒன்றிலும் போலீஸ் தலைமை அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது. பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.