June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையம் பகுதிகளில் கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு

1 min read

Collector ‘sudden’ inspection in the end areas

8.3.2023
கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி யில் புதிய பஸ் நிலைய இடத்தை ஆய்வு செய்து அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை பற்றி கேட்டறிந்து பார்வையிட்டார்.

கலெக்டர் ஆய்வு

கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் திடீர் ஆய்வு செய்தார். கடையம் பெரும்பத்து பகுதியில் நடைபெற்று வரும் ஊட்டச்சத்து கட்டிட பணி, சேர்வைக்காரன் பட்டியில் நடைபெற்று வரும் ஊரணி பணி, கீழக்கடையத்தில் நடைபெற்று வரும் நூலக கட்டிட பணி, முதலியார்பட்டியில் பள்ளி கட்டிட பணி ஆகியவற்றை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி யில் புதிய பஸ் நிலைய இடத்தை ஆய்வு செய்து அங்குள்ள திடக்கழிவு மேலாண்மை பற்றி கேட்டறிந்து பார்வையிட்டார். பின்னர் அவ்வை ஆசிரமம், சாந்தி காது கேளாதோர் பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.

கடனாநதி

இதையடுத்து கடனாநதி அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கடையம் யூனியன் ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் பூதபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.