June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மாணவ-மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன், நாயகி விருது

1 min read

Hero and heroine of the question award for students

9.2.2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு கேள்வியின் நாயகன், நாயகி விருதை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்.

தமிழ்க் கனவு நிகழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியானது நாகர்கோவில் புனித
சிலுவை பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் இன்று (9.3.2023)நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக்காட்சி, நான் முதல்வன்
திட்டம், வேலை வாய்ப்பு அலுவலகம், உயர்கல்வி வழிகாட்டுதல், வங்கி கடன், மாவட்ட தொழில் மையம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட துறைசார்ந்த அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பேசியதாவது:-
இந்த அரங்கத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் வருகைதந்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் தமிழ் பண்பாடு குறித்து நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டும்,
தமிழ்மொழி குறித்த வரலாற்று புத்தகங்களை படித்தும், இணையவழியாக தமிழ் மரபுகள் குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள முன்வர வேண்டும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்தோங்கிய பண்பாடு நமது தமிழர் பண்பாடு. அந்த வகையில் அனைவரும் நமது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டினையும், தமிழின் செழுமை குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழர்களின் பாரம்பரிய கலை
வடிவங்கள், இலக்கியம், அன்றைய காலக்கட்டங்களில் வழங்கப்பட்ட கல்வி முறைகள் போன்ற கூறுகளை ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் அறிந்து கொண்டு அடுத்த தலைமுறையினர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தமிழ் கனவு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன்
அவர்கள் மற்றும் ஊடகவியலாளர் திரு.குணசேகரன் ஆகியோர் கல்லூரி மாணவ,
மாணவியர்களிடையே பேசியதோடு, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பல்வேறு கேள்விகளுக்கு
பதிலளித்தார்கள்.
மேலும், இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் பெருமித செல்வன், பெருமித செல்வி மற்றும் கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி ஆகிய விருதுகளை கலெக்டர் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
திரு.மா.வீராசாமி, ஹோலி கிராஸ் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி சகாய செல்வி,
கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி மேரி கில்டா, மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி.சரோஜினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .அ.புகழேந்தி,
அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ், கோணம் அரசு கல்லூரி தமிழ் துறை பேராசிரியர்கள்
சா.அமுதன், அ.ஜோதி ரவீந்திரன், ஹோலி கிராஸ் தமிழ்த்துறை உதவி பேராசிரியர்
முனைவர் செ.தேன்மொழி உட்பட கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள், பலர் கலந்து கொண்டார்கள்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.