பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?- நீதிபதி விளக்கம்
1 min read
No action taken on sexual complaints against women in the workplace?- Judge’s explanation
9.3.2023
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களில் விசாகா கமிட்டி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் சட்ட பணிகள் ஆணைக்குழுவிடம் புகார் அளித்தால் சட்ட படி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் தின கருத்தரங்கில் மாவட்ட சார்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.நம்பிராஜன் கூறினார்.
சார்பு நீதிபதி
சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு நாகர்கோவிலில் நடந்தது, இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட சார்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.நம்பிராஜன் பேசியதாவது:-
அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பணிபுரியும் பெண்களின் பாலியல் மற்றும் வன்முறை புகார்களுக்கு விசாகா கமிட்டி நடவடிக்கை எடுக்காத நிலையில், புகார் அளித்தவர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது மனு அளித்தால் நாங்கள் இலவசமாக நடவடிக்கை எடுத்து தருகின்றோம். எந்த துறையில் தவறுகள் நடந்தாலும் அதனை தட்டிக் கேட்கும் அதிகாராம் எங்களிடம் உள்ளது. எனவே எந்த பிரச்சனை என்றாலும் தயங்காமல் மனு கொடுத்தால் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தயாராக இருக்கிறோம்.
இதற்கான அலுவலகம் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் பத்பநாபபுரம், குழித்துறை,பூதப்பாண்டி, இரணியல் நீதிமன்றங்களில் செயல்பட்டு வருகிறது. சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளராகவும், மாவட்ட சார்பு நீதிபதியாகவும் நான் இருந்து வருகிறேன். எப்போது வேண்டுமானாலும் சட்ட உதவிகளை எங்கள் அலுவலகங்கள் மூலம் இலவசமாக பெறலாம்.
இவ்வாறு நீதிபதி கே.நம்பிராஜன் கூறினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மரிய ஸ்டீபன் , மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, சி.எஸ்.ஆர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் டாக்டர் ராம்குமார் , ஆர்.யூ.சி மாநில கண்வீனர் வழக்கறிஞர் மரிய ஜேம்ஸ்,
பங்குதந்தை மைக்கேல்ராஜ் மற்றும் பல பெண்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.