தோரணமலை கடைசி வெள்ளி வருண கலச பூஜை
1 min read
Varuna Kalasa Pooja at Thoranamalai Temple
10.3.2023
தென்காசி-கடையம் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் கடைசி வெள்ளியை முன்னிட்டு இன்று காலை வருண கலசம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.
தோரணமலை
தென்காசி-கடையம் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் நலம் பெறவும், மழை வேண்டியும் இன்று காலை வருண கலசம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி மலையில் உள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அருகே உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் , அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
மேலும் கடைசி வெள்ளியை முன்னிட்டு அடிவாரத்தில் உள்ள விநாயகருக்கும், மலைமீதுள்ள முருகன், பத்திரகாளி அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இனறு காலையில் சிற்றுண்டியும் மதியம் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.