நெல்லை – தென்காசி இடையே மின்சார ரெயில் என்ஜின் இயக்கி சோதனை ஓட்டம்
1 min read
Test Run of Electric Train Locomotive between Nellai – Tenkasi
12/3/2023
நெல்லை – தென்காசி இடையே மின்சார ரெயில் என்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. பேட்டையில் மின் கட்டுப்பாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சார ரெயில்
நெல்லை – தென்காசி இடையே 72 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது போக்கு வரத்துக்கு தயாராக உள்ளது. இதற்கு முன்னோட்டமாக அந்த பாதையில் மின்சார ரெயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட அந்த என்ஜின் நெல்லையில் இருந்து புறப்பட்டு தென்காசி வரை சென்று மீண்டும் நெல்லைக்கு வந்தது.
அந்த என்ஜின் பாவூர் சத்திரம் ரெயில் நிலையத்தில் நெல்லை -செங்கோட்டை ரெயில் கிராசிங்கிற்காக நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது பயணிகள் அதை ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
இந்த நிலையில் நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வரையிலான பாதையை தென்னக ரெயில்வே முதன்மை தலைமை மின்மயமாக்கல் என்ஜினீயர் உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வானது நாளை (திங்கட்கிழமை) நெல்லையில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணி வரை நடைபெறும்.
பின்னர் தென்காசியில் இருந்து நெல்லைக்கு மின்சார ரெயில் சோதனை நடத்தப் படும். இந்த பணிகள் மாலை 4.30 மணியுடன் நெல்லை ரெயில் நிலையத்தில் முடி வடையும்படி திட்டமிடப்பட்டுள்ளது.
மின்சார ரெயில் இயக்குவதற்கு வசதியாக வீரவ நல்லூர் ரெயில்வே சார்பில் துணை மின் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மேட்டூர் மற்றும் பேட்டை யில் மின் கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், ஆழ்வார் குறிச்சி ஆகிய இடங்களில் துணை பிரிவு மின் நிலை யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
விருதுநகர் – தென்காசி இடையே 122 கிலோமீட்டர் தூரத்துக்கும், தென்காசி – பகவதிபுரம் இடையே 14 கிலோமீட்டர் தூரத்துக்கும் இந்த மாத இறுதிக்குள் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைய உள்ளது குறிப் பிடத்தக்கது.