June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மாமல்லபுரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பி உரசியதால் தந்தை- மகன் பலி

1 min read

A father and son died due to a cut power line near Mamallapuram

19/3/2023-
மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி உரசியதால் தந்தை- மகன் பலியானார்கள்.

தந்தை மகன்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன் (வயது42). இவர் திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள ஒரு கம்பெனியில் பிட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹேமநாதன்(12) இவர் மாமல்லபுரம் அரசினர் மேல்நிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று கோதண்டன் தன் வீட்டு தேவைக்காக தண்ணீர் கேன் வாங்குவதற்காக தனது வீட்டில் இருந்து தனது மகனுடன் மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு வருவதற்காக வயல்வெளி சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

சாவு

அப்போது உயர்அழுத்த மின் கம்பி ஒன்று 4 உயரத்தில் அறுந்து அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சாலையை கடக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த கோதண்டன், ஹேமநாதன் (தந்தை, மகன்) இருவர் மீதும் மின் கம்பி உரசிதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருவரது உடலும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தந்தை, மகன் இருவரும் ஒரே நேரத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வடகடம்பாடி கிராமத்தில் கடும் சேகாத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.