June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மத்திய பிரதேச முதல்மந்திரி சாமி தரிசனம்

1 min read

Darshan of Madhya Pradesh Chief Minister Sami at Sriperumbudur Adikesava Perumal Temple

19.3.2023
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மத்திய பிரதேச முதல்மந்திரி சாமி தரிசனம் செய்தார்.

ஆதிகேசவ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உலகப் புகழ்பெற்ற 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூரில் ராமானுஜர் அவதரித்ததால் ஆதிகேசவ பெருமாளுக்கு நிகராக ராமானுஜருக்கும் உற்சவம் நடைபெறுவது வழக்கம்

அந்த வகையில் அடுத்த மாதம் ஆதிகேசவ பெருமாளுக்கு சித்திரை திருவிழாவும் ராமானுஜருக்கு 1006 வது அவதார திருவிழாவும் நடைபெற உள்ளது.

ம.பி. முதல்வர்

இந்நிலையில் இன்று மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவரது மனைவி சாதனா சிங்குடன் ஸ்ரீபெரும்புதூர் வந்து ஐயங்கார் உடையில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளையும் அவரைத் தொடர்ந்து ராமானுஜரையும் தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து திருக்கோவிலின் சுற்று சுவற்றில் வரையப்பட்ட ஓவியங்களையும் கண்டு ரசித்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.

முன்னதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட சவுகான் திருக்கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையில் அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதையும் ஏற்றுக் கொண்டார். அதன்பின் பாஜக நகர தலைவர் பரத் தலைமையில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது

மத்திய பிரதேச முதல்வர் வருகைக்காக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருக்கோயில் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.