செங்கோட்டை அருகே தொழிலாளி கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது
1 min read
A worker was killed near Red Fort 2 friends arrested
21.3.2023
தென்காசி மாவட்டம்,செங்கோட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இதுதொடர்பாக அவரது நண்பர்கள் இரண்டு பேர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
பிணம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள கட்டளைக்குடியிருப்பு சுடுகாடு அருகே உடலில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து புளியரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், துணை காவல் கண்காணிப் பாளர் நாகசங்கர், செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனௌத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. பிணமாக கிடந்தவர் செங்கோட்டை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு அம்மன் கோவில் மேட்டு தெருவை சேர்ந்த கோமு என்பவரது மகன் அய்யப்பன் (வயது 42) என்பதும், கூலித்தொழிலாளியான இவர் தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.
அதே ஊரைச் சேர்ந்த பிரபு (வயது 43), செண்பகராஜா (வயது 27). ஆகியோர் இவரது நண்பர்கள் என்பதும் அதிகாலையில் அய்யப்பன், பிரபுவின் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். இதை பார்த்த பிரபு தனது நண்பரான செண்பகராஜாவிடம் தெரிவித்துள்ளார். அன்று இரவில் அய்யப்பனை மதுக்குடிப்பதற்காக பிரபு, செண்பகராஜா ஆகியோர் சுடுகாட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அங்கு கிடந்த கம்பு, தென்னை மட்டையால் 2 பேரும் அய்யப்பனை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பிரபு, செண்பகராஜா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.